Home சினிமா ஸ்ரீதேவியை பார்த்ததும் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றுவிட்டேன் – கமல்

ஸ்ரீதேவியை பார்த்ததும் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றுவிட்டேன் – கமல்

by admin

1970 மற்றும் 80-களில் பல படங்களில் ஜோடியாக நடித்து கலக்கிய ஜோடிதான் கமல்ஹாசன் – ஸ்ரீதேவி ஜோடி. இவர்கள் மூன்று முடிச்சு படத்தில் முதன் முதலாக இணைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை படங்களில ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்தப்படங்கள் அனைத்தும் வசூல் அள்ளி வழங்கிய படங்களாக தெரிவிக்கப்படடிருந்த நிலையில் மூன்றாம் பிறை ஹிந்தியில் சத்மா என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றிபெற்றது. இதன்பின்னர் ஸ்ரீதேவிக்கு ஹிந்தி வாய்ப்புக்கள் அதிகளவில் வந்ததால் அனில்கபூரின் சகோதரரும், தயாரிப்பாளருமான போனி கபூரை மணந்து மும்பையிலேயே குடியேறி விட்டார். இதனால் அவர்கள் அதிகம் சந்தித்துக் கொள்ளவில்லை.

இந்தநிலையில் நீண்ட காலத்துக்கு பின்னர் மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றுக்கு கமல்ஹாசனை அழைத்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியும், கணவர் போனிகபூரும் வந்திருந்தனர். விழாக்குழுவினர் கமல்ஹாசனுக்கான விருதினை வழங்க ஸ்ரீதேவியை அழைத்தனர். இதன்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய கமல்ஹாசன் ஸ்ரீதேவி கையால் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவரை பார்த்ததும் தான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More