இலங்கை பிரதான செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற கண்டாவளை பிரதேச கலாசார விழா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தின் கலாசார விழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கண்டாவளை கலாசார பேரவையினால் நடத்தப்பட்ட வருடாந்த கலாசார விழா இன்று கண்ணகிநகர் ஆலய மண்டபத்தில் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் காத்தவராயன் கூத்து, கர்நாடக சங்கீதம், நடனம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு, உள்ளுர் எழுத்தாளர்கள் ஆக்கங்களை கொண்டமைந்த வலை ஓசை நூலும் வெளியீட்டு வைக்க்பபட்டது. அத்தோடு, தெரிவு செய்யப்பட்ட சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி கலாசார அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலர் த.முகுந்தன், பளை பிரதேச செயலர் ப.ஜெயராணி வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அபிராமி, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் மற்றும் கலைஞர்கள் பொது மக்கள் என பெரும் திரளானோர் கலந்துகொண்டன

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.