Home இலங்கை 5,000 பேருக்கு புதிதாக அரச பணி வழங்கப்படுகிறது…..

5,000 பேருக்கு புதிதாக அரச பணி வழங்கப்படுகிறது…..

by admin

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் 5,000 பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக, அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் எதிர்வரும் திங்கட்கழமை காலை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவோர் மாவட்ட மட்டத்தில் இரண்டுவார பயிற்சி வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதன் மூலம் கடந்த வருடத்தில் ஜனவரி 30ஆம் திகதி அளவில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் முழுமைப்படுத்தப்படும் எனவும் அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More