Home உலகம் வடகொரிய அணுஆயுத சோதனை காரணமாக 11.5 அடி தூரம் நகர்ந்துள்ள மலை

வடகொரிய அணுஆயுத சோதனை காரணமாக 11.5 அடி தூரம் நகர்ந்துள்ள மலை

by admin


வடகொரியா மேற்கொண்ட அணுஆயுத சோதனை காரணமாக அங்குள்ள மலை ஒன்று 11.5 அடி தூரம் நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் மான்டேப் மலைப் பகுதியில் உள்ள புங்கேரி மேற்கொள்ளப்பட்ட ஒரு அணுஆயுத சோதனை நடவடிக்கையின் போது அப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அணு ஆயுத சோதனையின் காரணமாக அங்குள்ள மான்டேப் மலை 11.5 அடி தூரம் நகர்ந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் அந்த மலை சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

mantap2.jpg

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More