Home இலங்கை தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்தவர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்…

தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்தவர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்…

by admin

2ஆம் இணைப்பு.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த  மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் உயிரியல் பிாிவில் கல்வி கற்க்கும்  கோனேஸ்வரன் நிதர்சன் 19 ஆவார். நண்பர்களுடன் இணைந்து மின் இணைப்பு பணிக்குச் சென்ற மாணவன்

 

தாமரைக் கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து விழுந்து கிளிசொச்சி இளைஞன் பலி

Jun 8, 2018 @ 13:53

கட்டுமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாமரை கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 145 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததனால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி, அத்தரேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கோணேஸ்வரன் நிதர்ஷன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதானை காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More