Home இந்தியா தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் விபரம்? சட்டசபையில் முதல்வர்

தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் விபரம்? சட்டசபையில் முதல்வர்

by admin

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கலந்துரையாடலில் தமிழகத்துக்கு ஜூலை மாத பங்காக 31 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு ஆணையகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையகத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

உச்ச நீமிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர், தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆணைய கூட்டத்தின் முடிவை வரவேற்றார். மேலும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீர் கிடைத்தே தீரும் என்றும் கூறினார்.

ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதத்துக்கு 45.9 டிஎம்சி, செப்டம்பர் மாதத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More