Home இலங்கை கிளிநொச்சியில் கடந்த மாதம் 35 டெங்கு நோயாளர்கள்?

கிளிநொச்சியில் கடந்த மாதம் 35 டெங்கு நோயாளர்கள்?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பாிசேதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பது வழமை. (முன்னைய ஆண்டுத் தரவுகளின் அடிப்படையில்)

ஆனால் இந்த ஆண்டில் ஆனி மாதத்திலேயே இதுவரை 35 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.இது வழமைக்கு மாறானது என சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னைய வருடங்களில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி ஆனி மாதங்களில் ஆகக் கூடியது 21 (2017) டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 170 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து சமுதாய மருத்துவ நிபுணர்களைத் தொடர்புகொண்டு வினவியபோது அவர்கள் ‘கடந்த வருட ஆனிமாதத் தரவுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஆனி மாதம் முடிவதற்கு முன்னரே மிக அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது ஆபத்தான அறிகுறியாகும் (Outbreak situation) எனத் தெரவித்தனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் உடனடியாக விழிப்படைந்து தத்தமது பிரதேசங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இவ்வருட இறுதிக்குள் பாரிய டெங்குப் பரவலைக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ளவேண்டி வரலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More