Home இலங்கை மஹிந்தவுக்கு சீனா வழங்கிய பணம் – ஆதாரத்துடன் வெளிவரவுள்ளது…

மஹிந்தவுக்கு சீனா வழங்கிய பணம் – ஆதாரத்துடன் வெளிவரவுள்ளது…

by admin

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு சீனா வழங்கியதாக தெரிவிக்கப்படும் பணம் தொடர்பிலான முழுமையான விபரங்களை எதிர்வரும் வாரம் வெளியிடவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

உரிய ஆதாரங்களுடன் குறித்த பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளதாக, ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மஹரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்கவுள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More