Home இலங்கை பாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…

பாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…

by admin

வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, தனக்கு கீழ் பாதாள உலகு குழுவைச் சேர்ந்த 5 பேருடன் இணைத்து செயற்படுவதோடு, அவர்களை பாதுகாத்து வருவதாகவும் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்களான முன்னாள் பொலிஸ் அதிகாரி அருன் அத்தநாயக்க, கியான் சந்தருவான், கிருஸ்டோபர் ஆகியோர் அமைச்சர் சரத்பொன்சேகா கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவருடன் கலந்துகொண்டிருப்பதாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் இதன்போது ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய நாட்களில் தன்னை பாதாள உலகக் குழுவோடு இணைத்து வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More