Home உலகம் தாய்லாந்தில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை….

தாய்லாந்தில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை….

by admin


தாய்லாந்தில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு பாங்கொக் நீதிமன்றம் 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.தாய்லாந்து நாட்டை சேர்ந்த, 39 வயதுடைய வைராபான் சுக்பான் முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பம் ஆக்கியபின் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். அவர் மீது காவற்துறை நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகின.

புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டொலர் பணத்தை வைத்திருந்ததுடன், பல சொகுசு கார்களுக்கு உரிமையாளராகி, ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்தமை கண்டறியப்பட்டது.இந்த நிலையில் தாய்லாந்து அரசு, அமெரிக்காவில் இருந்து அவரை நாடு கடத்தி விசாரணை நடத்தியது. இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, இணைய வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து வழங்கியது.

மேலும் அவர்மீது முறைப்பாடு தெரிவித்த 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டொலரை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More