Home இந்தியா கன்னியாஸ்திரி மீதான பாலியல் பலாத்காரம் – சி.பி.ஐ. விசாரணை கோரி கேரள நீதிமன்றில் மனு..

கன்னியாஸ்திரி மீதான பாலியல் பலாத்காரம் – சி.பி.ஐ. விசாரணை கோரி கேரள நீதிமன்றில் மனு..

by admin

கேரள கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் பலாத்கார முறைப்பாடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறித்த கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறைப்பாட்டை வைக்கம் காவற்துறை துணை அதிபர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகின்ற போதும் வழக்கினை உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும் வழக்கை நீர்த்து போகச்செய்ய காவற்துறையினர் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி வும்சக கன்னியாஸ்திரிகளும் போராடி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு காவற்துறையினர் , 19-ந் திகதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.இந்தநிலையில் கன்னியாஸ்திரியின் பாலியல் பலாத்கார முறைப்பாடு குறித்து காவற்துறை சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி கேரள நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள 3 பேர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் அதில் ஒரு மனுதாரர் கோரி இருந்தார்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்த நிலையில் காவற்துறையின் விசாரணையில் நம்பிக்கை வெளியிட்ட நீதிபதிகள், பேராயரிடம் 19ம் காவற்துறை நடத்தும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.