Home இலங்கை ஒன்பது தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்

ஒன்பது தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த ஒன்பது மீனவர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் கைப்பற்றியிருந்தார்கள்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்.நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து நீரியல் வளத்துறை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் மீனவர்கள் முற்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் தலையில் காயத்திற்காக மருந்து கட்டப்பட்டு இருந்தது. காயத்திற்கான காரணத்தை அறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More