Home இலங்கை வடமராட்சியில் இளைஞர் அடித்துக்கொலை

வடமராட்சியில் இளைஞர் அடித்துக்கொலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.வடமராட்சி பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார். வடமராட்சி , பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த 22 வயதான வாசுதேவன் அமல்கரன் எனும் இளைஞனே அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் வீட்டிற்கு சற்று தொலைவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்ததபாது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் அதில் உரையாடிக்கொண்டு சென்ற போது சற்று தூரத்தில் நின்ற இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More