Home இந்தியா பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்குமாறு கோரி வழக்கு…

பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்குமாறு கோரி வழக்கு…

by admin

பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கையினை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளின் மகள்மார் உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். ராணுவ அதிகாரிகளின் மகள்களான 19 வயதான பிரீதி கேதார் கோகலே மற்றும் 20 வயதான கஜல் மிஷ்ரா ஆகிய இருவருமே இவ்வாறு வழக்கு தொடுத்துள்ளனர்.

பணியின்போது, தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகிற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள் காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கல்வீச்சுகளை சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த வழக்கில் எதிர் தரப்பினராக மத்திய அரசு, பாதுகாப்பு அமைச்சு, காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையகம் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More