Home இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு

by admin


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திருகோணமலையில், இன்று தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் அரச அலுவலகங்கலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாக காணப்பட்டதுடன் வியாபார நிலையங்களும மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 20ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ள நிலையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்கவும் வலியுறுத்துமாறு கோரும் விதத்தில் இவ்வாறு வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More