12 ஆவது ஐ.பி.எல்லின் ஆறாவது போட்டியில் பஞ்சாப் அணியினை கொல்கத்தா அணி 28 ஓட்டங்களினால் வென்றுள்ளது.
நேற்றையதினம் கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கிநைட் ரைடர்ஸ் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையிலும் போட்டி நடைபெற்ற நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பினை மேற்கொள்ள தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 218 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து 219 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 28 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
Spread the love
Add Comment