Home இலங்கை யாழ்.சாட்டியில் சங்கிலி அறுப்பு – 5 பேர் கைது…

யாழ்.சாட்டியில் சங்கிலி அறுப்பு – 5 பேர் கைது…

by admin

யாழ்.சாட்டி பகுதியில் உள்ள தேவாலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சாட்டியில் உள்ள தேவாலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தார். அதன் போது பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருடர்கள் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டனர். அவர்களால் மூன்று சங்கிலிகள் அறுக்கப்பட்டன.

சங்கிலியை பறி கொடுத்தவர்கள் அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிசார் தேவாலயத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஹயஸ் ரக வாகனத்தை மறித்து அதனுள் இருந்தவர்களை சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து இரண்டு சங்கிலிகள் மீட்கப்பட்டன.

குறித்த இரு சங்கிலியும் தேவாலயத்தில் பக்தர்களிடமிருந்து அறுக்கப்பட்ட சங்கிலி என்பதனை பொலிசார் அடையாளம் கண்டு கொண்டதனை அடுத்து வாகனத்தில் இருந்த மூன்று பெண்கள் உட்பட ஐவரை பொலிசார் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் பயணித்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்த்தவர்கள் என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More