Home இலங்கை ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் கல்முனை நீதிமன்றில்..

ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் கல்முனை நீதிமன்றில்..

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மூளையாக செயற்பட்ட ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இன்று புதன்கிழமை (03) திகதி நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி மரணசான்றிதழ் வழங்குவதற்கென மரண விசாரணைக்காகவே மேற்படி நபர்கள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரண விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில் ஸஹ்ரானின் தங்கையான நியாஸ் மதனியா மற்றும் அவரது கணவர் எம்.எம். நியாஸ் சாய்ந்தமருது தாக்குதலில் பலியான வார உரைகல் ஊடகவியலாளர் என கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா உள்ளிட்டோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப்புலனாய்வு வாகனம் மற்றும் சிறைச்சாலை பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.ஷஹ்ரான் ஹஷிம்,

மேலும் இவ்வாறு இன்று ஆஜர் படுத்தப்பட்ட ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தொடர்பான விசாரணை யாவும் நீதிவானின் சமாதான அறையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த விசாரணையின் போது வேறு வேறாக ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் தப்பிய ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) கடந்த புதன்கிழமை (26) காலை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்த அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கடந்த தவணை அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவி இம்முறை கல்முனை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்படவில்லை.

எனினும் எவ்வாறான விசாரணை நீதிமன்றில் நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்க பதிவாளர் மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த மரண விசாரணை தொடர்பாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை அன்று விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திகளை ஊடகங்களிற்கு வழங்குவதற்காக செய்தி சேகரிக்க செல்கின்ற ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றத்தில் உரிய தகவல்களை பெறுவதற்கு பல்வேறு சிரமங்கள் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாறுக் ஷிஹான்-

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More