Home இந்தியா பனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலி

பனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலி

by admin


சென்னையில் அதிமுகவினர் வைத்த பனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயதான இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.  சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் நேற்றையதினம் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பகுதியில் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சி.ஜெயகோபால் என்பவரது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுபஸ்ரீயின் அந்த வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் பாரவூர்தி அவரது வாகனத்தில் மோதியதில் அவர் கடுமையாகப் பாதிகப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .  #பனர்  #விபத்தில்#இளம்பெண் #பலி #அதிமுக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More