Home இலங்கை யாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு அர்ஜூன – சுரேன் ராகவன் கண்காணிப்பு பயணம்

யாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு அர்ஜூன – சுரேன் ராகவன் கண்காணிப்பு பயணம்

by admin

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இன்று (12) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆளுநர் குறிப்பிடுகையில் இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்குபின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும் . புலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ் மண்ணில் வந்து தமது உறவுகளை இலகுவாக சந்திப்பதற்கான வழியாக இது அமைகின்றது. இந்த விமான போக்குவரத்தின்போது தற்போது தமிழ்நாட்டிற்கான 7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை வாரத்திற்கு 12 விமான சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். #யாழ் #சர்வதேசவிமானநிலையம்  #அர்ஜூனரணதுங்க #சுரேன்ராகவன்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More