Home இலங்கை சட்டவிரோத  மணல்அகழ்வில் ஈடுபட்ட ஐவர்  கைது

சட்டவிரோத  மணல்அகழ்வில் ஈடுபட்ட ஐவர்  கைது

by admin

அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் யாழ்ப்பாணம்  காவல்துறையினரினால்  நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள கடற்கரை ஓரமாக பெக்கோ வாகனத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட போது 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதியின்றி அந்தப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட கண்டறியப்பட்டது . அத்துடன் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு டிப்பர் வாகனம் 3 உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைக்காக  யாழ்ப்பாணம்  காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  #சட்டவிரோத   #மணல்அகழ்வில் #கைது #அரியாலை   #பூம்புகார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More