Home இலங்கை ஓய்வூதியம் – முதியோர் கொடுப்பனவு வீடுகளுக்கே – சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா – அங்கவீனர்களுக்கும் கொடுப்பனவு

ஓய்வூதியம் – முதியோர் கொடுப்பனவு வீடுகளுக்கே – சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா – அங்கவீனர்களுக்கும் கொடுப்பனவு

by admin

• ஓய்வூதியம் மற்றும் மாதாந்த முதியோர் கொடுப்பனவு வீடுகளுக்கே அனுப்பிவைக்கப்படும்.


• சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்று வழங்கப்படும்.

• அங்கவீனர்களுக்கும் கொடுப்பனவொன்று வழங்கப்படும்.

அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், இருபத்தி மூன்று இலட்சம் சமூர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதி கிடைத்துள்ளது.
அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்விஷன் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 2020.04.03 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (2020.03.28) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும் . #ஓய்வூதியம்  #முதியோர்கொடுப்பனவு  #சமூர்த்தி   #அங்கவீனர்  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More