Home இலங்கை நோய்பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் அளவுக்கு அதிகாமாக பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்..

நோய்பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் அளவுக்கு அதிகாமாக பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்..

by admin

அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

மனஉளைச்சல் பசி, தூக்கம் என்பவற்றை பாதிக்கின்றது. உளநல ஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது. தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மன உளைச்சலுக்குள்ளாகி தம்நோயெதிர்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மனஉளைச்சலுக்குள்ளாக்கி நோயெதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளை பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆகவே தேவையற்ற செய்திகளையும், வீடியோக்களையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒருசில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More