உலகம் பிரதான செய்திகள்

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்


பிரான்சின் நிஸ் எனப்படும் நகரத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.


பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலினை ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ள நிஸ் நகர மேயர் , நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில் தாக்குதல் இடம்பெற்ற பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர் எனவும் தொிவிக்கப்படுகின்றது.

முகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த 47 வயதான வரலாற்று ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #பிரான்ஸ் #பயங்கரவாததாக்குதல் #கத்திக்குத்து #தேவாலயம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.