
அமொிக்காவின் நியூயோர்க் சிட்டி அமைந்துள்ள தேவாலயத்தின் வெளியே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளிப்புறந்தில் நின்றுகொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரு துப்பாக்கிகளை வைத்திருந்தார் எனவும் அவர் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, என்னைக் கொல்லுங்கள் என்று கத்தியதாகவும் தொிவித்த காவல்துறைநயினா் இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தொிவித்துள்ளனா்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 50 வயது இருக்கும் எனவும், காவல்துறையினா் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த குறித்த நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தொிவிக்கப்பட்டள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். #அமொிக்கா #தேவாலயத்தில் #துப்பாக்கிச்சூடு #கிறிஸ்துமஸ்
Add Comment