
நீதிமன்ற தடையுத்தரவை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்துகொட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காவல்துறையினா் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு வந்த காவல்துறையினா் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்து சென்றனர். #P2P #சிவாஜிலிங்கம் #விசாரணை #பொத்துவில் #பொலிகண்டி

Spread the love
Add Comment