Home இலங்கை மணல் கடத்தலை தடுக்க சென்ற காவல்துறையினர் மீது டிப்பரால் மோதிய கடத்தல்காரர்கள்

மணல் கடத்தலை தடுக்க சென்ற காவல்துறையினர் மீது டிப்பரால் மோதிய கடத்தல்காரர்கள்

by admin

வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட காவல்துறை அலுவலகரை கடத்தல்காரர்கள் டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர். 


இதன் போது படுகாயமடைந்த காவல்துறைஉத்தியோகஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டத்துக்குப் புறம்பமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றிப் பயணிப்பதாக உள்ளூர் மக்களால் பருத்தித்துறை காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனை அறிந்து பருத்தித்துறை காவல் நிலைய முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி, உபகாவல்துறைப் பரிசோதகர் அஜித் தலைமையில் 6 பேர் கொண்ட காவல்துறைபிரிவு சம்பவ இடத்துக்கு சென்றிருந்தனர்.


அவ்வேளை வல்லிபுர குறிச்சிப் பகுதியில் மணல் ஏற்றியவாறு டிப்பர் வாகனம் வருவதைக் கண்ட காவல்துறையினர் அதனை மறிக்க முற்பட்டுள்ளனர். எனினும் டிப்பர் வாகனம் உப காவல்துறை பரிசோதகரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த உப காவல்துறைபரிசோதகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை காவல்துறையினர், தப்பித்த  சாரதியைத் தேடி வருகின்றனர். #வடமராட்சி #டிப்பர் #மணல்கடத்தல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More