உலகம் பிரதான செய்திகள்

கெயிட்டி நாட்டு ஜனாதிபதி சுட்டுக்கொலை

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான கெயிட்டி நாட்டின் ஜனாதிபதி  ஜோவெனல் மோய்சே (Jovenel Moise) அவரது வீட்டில் வைத்து இனந்தொியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரை கொலை செய்தது வெளிநாட்டுக்காரர்கள் எனவும், அவர்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்

கெயிட்டியில் சமீப காலமாக வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனால் நாட்டின் தலைநகர் போர்ட்டொ பிரின்சில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி ஜோவெனல் மாய்சே கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்றதில் இருந்தே அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.