Home இலங்கை இந்திய மீனவரின் சடலம் காரைநகரில் கரையொதுங்கியது

இந்திய மீனவரின் சடலம் காரைநகரில் கரையொதுங்கியது

by admin

கடல் சீற்றம் காரணமாக கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.

.
காணாமல் போயிருந்த மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் இன்று மதியம் அவர் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More