Home இலங்கை ”தேசிய அரசாங்கமா- நான் பிரதமரா? ஐயோ என்னை விட்டுடுங்க ராஜாக்களே”!

”தேசிய அரசாங்கமா- நான் பிரதமரா? ஐயோ என்னை விட்டுடுங்க ராஜாக்களே”!

by admin

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவார்த்தையில், தேசிய அரசாங்கமொன்று செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லையென, அவருக்கு நெருக்கமான தரப்புகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து மீண்டெழுவதற்கு, தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது என்றும். அதில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை, நீக்கிவிட்டு அந்த வெற்றிடத்துக்கு ஐ.தே.க உறுப்பினர்களை நியமிக்கவும் நிதியச்சர் பசில் ராஜபக்‌ஷ, இணக்கம் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த தேசிய அரசாங்கத்தில் நிதியமைச்சராக பசில் ராஜபக்‌ஸவே செயற்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகிருந்தன.

எனினும், தேசிய அரசாங்கம் ஒன்றுக்குச் செல்ல​வேண்டிய தேவையில்லை. சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More