Home உலகம் அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

by admin

அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது நேற்று முன்தினம் இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்கின்றனர் எனும் அமெரிக்கர்கள் சிலரின் குற்றச்சாட்டு காரணமாகவே இதுபோன்ற இனவெறி தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் இருக்கும் ஒரு வணிக வளாகத்துக்கு அருகே 4 இந்திய – அமெரிக்க பெண்கள் நின்று பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மெக்சிகன் – அமெரிக்க பெண் அவர்களை தனது கைபேசியில் வீடியோ எடுத்தார்.

இதனை பார்த்த இந்தியப் பெண்கள், “ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்” எனக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், “நான் உங்களைப் போன்ற இந்தியர்களை வெறுக்கிறேன். எங்கு சென்றாலும், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். நான் மெக்சிகன் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவள். நீங்கள் அமெரிக்காவில் பிறந்தீர்களா? பிறகு உங்களுக்கு இங்கு என்ன வேலை? உங்கள் நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள். இந்தியாவில் நன்றாக வாழ முடியும் என்கிற பொழுது அமெரிக்காவுக்கு ஏன் வருகிறீர்கள்?” எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா குறித்தும், இந்தியர்கள் குறித்தும் மிக மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார். . “தேவையற்ற வாக்குவாதத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள். இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்” என இந்தியப் பெண்கள் தொிவித்ததனையடுத்து ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீ யார் எனக்கு உத்தரவிடுவது எனக் கூறிக்கொண்டே அவா்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் ஒரு பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணை அங்கிருந்து செல்லுமாறு இந்தியப் பெண்கள் கூறியபோது தனது கைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்த அந்தப் பெண் மேலும், கைபேசியில் வீடியோ எடுக்காதீர்கள் என மிரட்டினார்.

ஆனால் தொடர்ந்து இந்தியப் பெண்கள் அவரை வீடியோ எடுத்ததால் அங்கிருந்து அவர் சென்றுவிட்டார். இந்த வீடியோவை இந்தியப் பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த டல்லாஸ் நகர காவல்துறையினா் , இனவெறி தாக்குதல் நடத்திய பெண்ணை நேற்று இரவு கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் எஸ்மெரால்டா என்பது தெரியவந்தது. அவர் மீது தாக்குதல், உடல்ரீதியாக காயப்படுத்துதல், தீவிரவாத மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் 10,000 டொலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/racist-attack-on-indian-women-in-texas-one-woman-arrested-472630.html

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More