மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சிவராத்திரி தினத்தை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டன்லி டிமல் தலைமையில் இன்று புதன்கிழமை (25) காலை விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபை செயலாளர் சிவசம்பு ராமகிருஷ்ணன் மற்றும் அதன் பிரதிநிதிகள் , அரச தனியார் திணைக்களின் தலைவர்கள்,போலீஸ், ராணுவம் உயர் அதிகாரிகள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட அழைக்கப்பட்ட பிரதி நிதிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் நோய் தொற்று காரணமாக சிவராத்திரி தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாத்திரிகர்கள் வருகை குறைக்கப்பட்டு பல சுகாதார கட்டுப்பாட்டுக்கு மத்தியில் இடம்பெற்றது. இம்முறை சிவராத்திரி தினம் பல்லாயிரக்கணக்கான யாத்திரைகள் ஒன்று கூடலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Add Comment