இலங்கை பிரதான செய்திகள்

புதிய அரசியல் சாசனம் குறித்து ஜனவரி மாதம் பாராளுமன்றில் விவாதம் செய்யப்படும் – லக்ஸ்மன் கிரியல்ல

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அரசியல் சாசனம் குறித்து ஜனவரி மாதம் பாராளுமன்றில் விவாதம் செய்யப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் எனவும் அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் ஆறு உப குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் விவாதம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் தடவையாக அரசியல் சாசனம் அமைக்கப்படும் விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதாகவும், கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் சாசனம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தி அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.