Home இலங்கை பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு :

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு :

by admin

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கு எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பிள்ளையான் உள்ளிட்ட  4 பேரினதும் விளக்கமறியல் இதன்போது நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நத்தார் நாளில்  மரியாள் தேவாலயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த கொலை தொடர்பில் கடந்த 09.10.2015 அன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

அவருடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் கைதுசெய்யப்பட்டு  தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More