Home இலங்கை அரசாங்கத்திற்கு முகநூலின் மகத்துவம் புரியவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

அரசாங்கத்திற்கு முகநூலின் மகத்துவம் புரியவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்திற்கு முகநூலின் மகத்துவம் புரியவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறப்பு அமைச்சர் பதவி குறித்த தகவல்கள் பொய்யானவை என அரசாங்கம் பிரச்சாரம் செய்த போதிலும் உண்மையில் அவ்வாறான பதவி உருவாக்கப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் புதிய முகநூல் கணக்கு ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த முகநூல் கணக்கின் ஊடாக அரசாங்கத்தினால் மே;றகொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பில் அம்பலப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் முகநூல் பக்கங்களை ஒடுக்குவதற்கு முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வீட்டுக்கு செல்வதற்கு முகநூல் மிக முக்கியமான காரணம் என்பதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளாது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More