Home இலங்கை ஜனாதிபதியை பான் கீ மூன் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

ஜனாதிபதியை பான் கீ மூன் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

by admin

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பதவியிலிருந்து விடைபெறும் பான் கீ மூன் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை இன்று (22) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய   பான் கீ மூன்  நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி செயலக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் இலங்கையை புதிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெறும் எனவும்  குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியிலிருந்து விலகிச்சென்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பான் கீ மூன் அவர்கள் இதன்போது உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் அவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More