Home இலங்கை 2020ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கும்

2020ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டு சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பிரதமராக சமால் ராஜபக்ஸ கடமையாற்றுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமால் ராஜபக்ஸ பாராளுமன்றில் உரையாற்றும் போது கட்சியையும் கட்சித் தலைமையையும் நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் என்ற போதிலும், மஹிந்த ராஜபக்ஸ எதிரிலேயே தங்காலையில் வைத்து கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை சமால் ராஜபக்ஸ விமர்சனம் செய்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More