Home இந்தியா உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 7 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 7 பேர் பலி

by admin

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று ஏற்பட்ட வீதிவிபத்துக்களில்; சிக்கி 7 பேர்  உயிரிழந்ததுடன்  14 பேர் காயமடைந்துள்ளனர். இந்திய வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடுங்குளிர்  நிலவிவரும் நிலையில்   வீதிகளில்  பல கி.மீ தூரத்துக்கு பனிமூட்டம்  காணப்படுவதனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக  வாகனசாரதிகள்  மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி வருகின்ற நிலையில்  நேற்று பனிமூட்டத்தால் நிகழ்ந்த வௌ;வேறு சாலை விபத்துகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More