Home இலங்கைசசி வெல்கமவின் பிணை மனு நிராகரிப்பு:

சசி வெல்கமவின் பிணை மனு நிராகரிப்பு:

by admin

இலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கமவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டதாக சசி வெல்கம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சசி வெல்கமவை எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபருக்கு பிணை வழங்க வேண்டிய அவசர விசேட காரணிகள் எதுவுமில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

125 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More