Home இலங்கைநல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாண்டு பூர்த்தி நிகழ்வில் பங்கேற்குமாறு ஆந்திர முதல்வருக்கு அழைப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாண்டு பூர்த்தி நிகழ்வில் பங்கேற்குமாறு ஆந்திர முதல்வருக்கு அழைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சி அரசாங்கம் பதவி ஏற்றுக்கொண்டு இரண்டாண்டுகள் பூர்த்தியாகும் நிகழ்வில் பங்கேற்குமாறு இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநில ஆளுனர் சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பிலான கடிதமொன்றை ஆந்திர முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் வறுமை ஒழிப்புத் திட்டங்களை முதல்வர் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் இது குறித்து இரண்டாண்டு பூர்த்தி நிகழ்வில் உரையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் கோபாலகிருஸ்ண காந்தி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More