Home அரசியல்சர்வதேச ரீதியான அழுத்தங்கள் கிடையாது – மஹிந்த அமரவீர

சர்வதேச ரீதியான அழுத்தங்கள் கிடையாது – மஹிந்த அமரவீர

by admin

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையில்லை :- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

சர்வதேச ரீதியான அழுத்தங்கள் கிடையாது – மஹிந்த அமரவீர
சர்வதேச ரீதியான அழுத்தங்கள் தற்போது கிடையாது எனவும் இலங்கை தொடர்பில் உலக நாடுகள் விடுத்து வந்த எச்சரிக்கைகள் தற்போது கிடையாது எனவும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையில்லை :

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்படும் சிறிய கூட்டங்கள் பேரணிகள் குறித்து கண்டுகொள்ளப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் சாதாரண விடயமாகவே இதனைக் கருத வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், தாமும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கட்சி பிளவடைவதற்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர் கூட்டு எதிர்க்கட்சியினருக்கான மக்கள் ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More