Home உலகம்மொசூல் அருகே உள்ள பார்டெல்லாவை கைப்பற்றியுள்ளதாக ஈராக் படையினர் அறிவிப்பு:-

மொசூல் அருகே உள்ள பார்டெல்லாவை கைப்பற்றியுள்ளதாக ஈராக் படையினர் அறிவிப்பு:-

by editortamil

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், மொசூல் அருகே உள்ள பார்டெல்லா என்ற நகரை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ஈராக் படையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர்களின் ஆதரவோடு இந்த சிறப்பு படையினர் இந்த  நகரை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வடக்கே, ஈராக் ராணுவத்தின் துணையுடன் குர்தீஷ் போராளிகளும் நிலப்பரப்பொன்றை கைப்பற்றி உள்ளதாகவும் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை மீண்டும் கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலமான தாக்குதல் தொடுத்துவரும் படையினர் மொசூலின் புறநகர் பகுதியை இன்னும் அடையவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More