Home இந்தியா ஆசாராம் பாபு ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

ஆசாராம் பாபு ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

by admin


இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் சிறுவயதுப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்தமை மற்றும் , குஜராத் மாநிலத்தில் இரு சிறுமிகளை பலாத்காரம் செய்தமை  உள்ளிட்ட  குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட பிரபல சாமியாரான ஆசாராம் பாபு ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஆசாராம் பாபு  கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்   ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் சிறையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தான் உடல்நலக்குறைவால் பாதிப்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு ஜாமீனில் விடுவிக்குமாறு  உசச நீதிமன்றில்  வக்கீல் மூலமாக கோரியிருந்தார்.
இந்தநிலையில் ஆசாராம் பாபுவை ஜாமினில் விட மறுத்த நீதிபதிகள்  அவர் ஜோத்பூர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற அனுமதி அளித்து, இம்மனு மீதான மறுவிசாரணையை நவம்பர் 21-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More