Home இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை – மஹிந்த ராஜபக்ஸ

அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை எனவும் நல்லாட்சி அரசாங்கம் கருத்துக்களுக்கு செவிமடுக்காது சர்வாதிகார போக்கில் செயற்பட்டு வருவதனால் இவ்வாறு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தண்டிக்கப்படுவர் என்ற அச்சத்தினால் இவர்கள் வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் யாருக்கு தொடர்பு இருக்கின்றது என்பது தற்போது அம்பலமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More