Home உலகம் மெக்காவை குறிவைத்து ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்

மெக்காவை குறிவைத்து ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்

by admin

குளோபல் தமிழ் செய்தியாளர்

சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஹவுத்தி இனப் போராளிகள் இன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக  சவூதி அரேபியா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   ரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் (40மைல்)  தூரத்தில் விழுந்த அந்த ஏவுகணையை தமது  விமானப்படைகள் தடுத்துநிறுத்தி தாக்கி அழித்ததாகவும் அந்த செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளுக்கெதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து தாக்குதல்களை  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

yeman2

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More