Home இலங்கைபல்வேறு பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரமப்பிக்கப்படவுள்ளன – ஜனாதிபதி

பல்வேறு பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரமப்பிக்கப்படவுள்ளன – ஜனாதிபதி

by admin


விவசாயத்தின் மூலமே எமது நாடு எப்போதும் வெற்றிபெற்றுவந்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , நாட்டின் விவசாயத் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் கொழும்பு 07 ஹெக்டர் கொப்பேகடுவ கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மஹவலி பொறியியலாளர்கள் சங்கத்தின் 30வது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் விவசாயத் துறையை பலப்படுத்துவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு நிதி ஏற்பாடுகளின் கீழ் அரசாங்கம் தற்போது பல நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, பின்னடைந்திருந்த பல்வேறு திட்டங்களின் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More