Home இலங்கை அர்ஜூன் மகேந்திரன் தப்பிச் செல்ல இடமளிக்கப்படாது – மஹிந்த அமரவீர

அர்ஜூன் மகேந்திரன் தப்பிச் செல்ல இடமளிக்கப்படாது – மஹிந்த அமரவீர

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தப்பிச் செல்ல இடமளிக்கப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்பொழுது வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ள அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பாவிட்டால், சர்வதேச காவல்துறையின் உதவியுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிச் செல்ல அவருக்கு இடமளிக்கப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் அர்ஜூன் மகேந்திரனை பதவியிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்க தாமே குரல் கொடுத்ததாகவும், தாமே முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More