Home இலங்கைபொதுத்துறை சேவைகளை கண்காணிப்பதற்கு அரசாங்கம் விசேட பிரிவு ஒன்றை உருவாக்க உள்ளது

பொதுத்துறை சேவைகளை கண்காணிப்பதற்கு அரசாங்கம் விசேட பிரிவு ஒன்றை உருவாக்க உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பொதுத்துறை சேவைகளை கண்காணிப்பதற்கு அரசாங்கம் விசேட பிரிவு ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. புதிய சட்டமொன்றின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய  உருவாக்கப்பட உள்ள இந்த நிறுவனம் தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கண்காணிக்கக்கூடிய வகையில் இந்த நிறுவனம் அமைக்கப்பட உள்ளதாகவும் சுயாதீனமான முறையில் இந்த நிறுவனம் இயங்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More