Home இலங்கை சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்தவிற்கு, ஜே.ஆர். ஜயவர்தன பணம் வழங்கினார்

சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்தவிற்கு, ஜே.ஆர். ஜயவர்தன பணம் வழங்கினார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்த ராபஜக்ஸவிற்கு, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பணம் வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித்தலைவர் மைத்திரிபால சேனாநாயக்க ஆகியோருக்கு ஜே.ஆர். பணம் வழங்கியதாகவும் இவ்வாறு பணம் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பணம் வழங்கப்பட்டமைக்கான ரசீதுகள் தம்மிடம் காணப்படுவதாகவும் தாம் கூறுவது பொய்யென்றால் மஹிந்த ராஜபக்ஸ சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் எனவும்  அவர் சவால் விடுத்துள்ளார்.

கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்த பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் கட்சியை விட்டு எவரேனும் விலக விரும்பினால் விலக முடியும் எனவும், மக்கள் ராஜபக்ஸக்களை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More