Home இலங்கை ஐந்து ஆண்டுகளில் நாடு அபிவிருத்தி செய்யப்படும் – பிரதமர்

ஐந்து ஆண்டுகளில் நாடு அபிவிருத்தி செய்யப்படும் – பிரதமர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐந்து ஆண்டுகளில் நாடு அபிவிருத்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவடையச் செய்யும் நோக்கமோ அல்லது திட்டமோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வேளைகளில் எமக்கு அதிகாரம் கிடைக்கும் சில வேளைகளில் சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடைக்கும் எனவும் சில வேளைகளில் இரண்டு தரப்பும் இணைந்து ஜெர்மனியில் போன்று செயற்பட நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் நாம் அவ்வாறான விடயங்களை எதிர்க்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஊடகங்களும் சில விடயங்களை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு எது தேவையோ அதனைக்கொடுக்க ஊடகங்கள் பழகிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களின் குரல்களினால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More